SLNCU

கன்னெலிய- தெதியகல- நாகியாதெனிய உயிர்க்கோளக் காப்பகம் (KDN)

2004 ஆம் ஆண்டு பெயரிடப்பட்ட கன்னெலிய – தெதியகல-நாகியதெனிய உயிர்க்கோளக் காப்பகம். இலங்கையில் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய வலையமைப்பாகும், இது மொத்தம் 25,393 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன் அண்ணளவாக 24,000 மக்களுக்கு ஆதரவளிக்கிறது. 6.23437 அகலாங்கு மற்றும் 80.3864 நெட்டாங்கில் அமைந்துள்ள இந்த வன வளாகம், தேசிய பாதுகாப்பு மீளாய்வுகள் மற்றும் உயிர்ப்பல்வகைமை கண்காணிப்பு ஆய்வுகள் மூலம் நாட்டின் மிக முக்கியமான உயிர்ப்பல்வகைமை மையங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இலங்கையில் தாவர உயர்ப்பல்வகைமைக்கு மிகவும் வளமான தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பிடத்தக்க கலாசார, வரலாற்று மற்றும் சமூக-பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளது. 5,894 ஹெக்டேர் பரப்பளவிலுள்ள மைய வலயம், முழு கன்னெலிய காடுகளையும் உள்ளடக்கியது, அதேநேரத்தில் நாகியாதெனிய (5,866 ஹெக்டேர்) மற்றும் தெதியகல (13,473 ஹெக்டேர்) காடுகள் இடையக வலயத்தை உருவாக்குகின்றன, இது இயற்கை வனப்பகுதியால் மேம்பட்டு நிற்கிறது. நிலைமாற்று வலயத்தில் தேயிலை, இறப்பர், இலவங்கப்பட்டை மற்றும் நெற் செய்கை போன்ற பல்வேறு நிலப் பயன்பாடுகளும், 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வீட்டுத் தோட்டங்கள், நகரங்கள் மற்றும் வீதிகளும் அடங்கும். இங்கு மரம் அல்லாத வனப் பொருட்களைச் சார்ந்திருப்பது வரலாற்று ரீதியாக பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தியுள்ளது, இது நிலையான வாழ்வாதாரம் மற்றும் வள முகாமைத்துவ செயல்நுணுக்கங்களின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.