SLNCU

கண்டி புனித நகரம்

இலங்கையின் இறுதி அரச தலைநகரமாகக் காணப்பட்ட கண்டி புனித நகரம், மதம், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் வாழும் மையமாகத் திகழ்கிறது. மத்திய மலைநாட்டில் மலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கண்டி, 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கண்டி இராச்சியத்தின் தலைநகராக செயற்பட்டதுடன், இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியை வெற்றிகரமாக எதிர்த்து, உள்நாட்டு ஆட்சி மற்றும் கலாசார நடைமுறைகளைப் பாதுகாத்தது. அதன் மையப்பகுதியில் புனிதத் தந்தத் தாது நினைவுச்சின்னக் (ஶ்ரீ தலதா மாளிகை) கோயில் உள்ளது. இது பௌத்தத்தின் மிகவும் புனிதமான நினைவுச்சின்னங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது மற்றும் அரசாட்சிக்கும் மத அதிகாரத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவைக் குறிக்கிறது. கண்டி பல நூற்றாண்டுகள் பழமையான சடங்குகள், கலைகள், இசை மற்றும் கைவினைகளை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது, இது வருடாந்த எசல பெரஹெரா ஊர்வலத்தின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு வாழும் பாரம்பரிய நகரமாக, கண்டி தொடர்ச்சியான ஆன்மீக பக்தி, அரச மரபுகள் மற்றும் கலாசார அடையாளம் என்பவற்றின் மூலம் மிகச் சிறந்த உலகளாவிய மதிப்பைப் பிரதிபலிக்கிறது.