SLNCU

புலனாகாத கலாசார மரபுரிமை (ICH)

புலனாகாத கலாசார மரபுரிமை(ICH) என்பது சமூகங்கள் தமது அடையாளத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கும் கலாசாரத்தின் வாழ்க்கை வெளிப்பாடுகளை​ப் பிரதிபலிக்கின்றது. இது மரபுகள், அறிவு, திறன்கள், நிகழ்த்து கலைகள், சமூக நடைமுறைகள், சடங்குகள், பண்டிகை நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய கைவினைத்திறன் ஆகியவற்றை உள்ளடக்கும். அவை தொடர்ந்து உருவாக்கப்பட்டு தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு பரவுகின்றன. அன்றாட வாழ்வில் வேரூன்றிய புலனாகாத கலாசார மரபுரிமையானது வரலாறு, இயற்கை மற்றும் சமூக சூழலுடனான தொடர்புகள் மூலம் உருவாகின்றது மற்றும் இது முக்கியமாக நடைமுறை மற்றும் வாய்வழி மரபு மூலம் கடத்தப்படுகின்றது.

காலப்போக்கில், கலாசார மரபுரிமை பற்றிய கருத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் பௌதீக கலைப்பொருட்கள் என்பவற்றுக்கு அப்பால் விரிவடைந்துள்ளது. அதிகரித்து வரும் உலகமயமாக்கப்பட்ட உலகில் கலாசார பன்முகத்தன்மை, சமூக ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை என்பவற்றைப் பராமரிப்பதில் வாழ்க்கை மரபுரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்ற “கலாசார மரபுரிமையானது நினைவுச் சின்னங்கள் மற்றும் பொருட்களின் சேகரிப்புடன் முடிவடைவதில்லை” என யுனெஸ்கோ வலியுறுத்தியுள்ளது. இது பலவீனமான, புலனாகாத கலாசார மரபுரிமை சமூக அடையாளத்தை வலுப்படுத்துவதிலும் கலாசார தொடர்ச்சியை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

புலனாகாத கலாசார மரபுரிமையைப் (ICH) பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் முயற்சிகள் 1997 ஆம் ஆண்டு மனிதகுலத்தின் வாய்மொழி மற்றும் புலனாகாத மரபுரிமையின் தலைசிறந்த படைப்புகளின் பிரகடனத்துடன் தொடங்கியது. அத்துடன், 2003 ஆம் ஆண்டு புலனாகாத கலாசார மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான மாநாட்டை ஏற்றுக்கொண்டதன் மூலம் இது மேலும் வலுப்படுத்தப்பட்டது. இந்த மாநாடு சமூக பங்கேற்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு என்பவற்றின் மூலம் வாழ்க்கை மரபுரிமையைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் மற்றும் பரப்புவதற்கும் உலகளாவிய கட்டமைப்பை நிறுவியது.

யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் புலனாகாத கலாசார மரபுரிமை பற்றிய பிரதிநிதித்துவ பட்டியலில் இலங்கை மூன்று கூறுகளைப் பொறித்துள்ளது: ரூக்கட நாட்டிய, தும்பர ரட்டா கலால மற்றும் கித்துல் மரத்திலிருந்து சாறு சேகரிக்கும் பாரம்பரிய முறை என்பவையே அவையாகும். இக் கல்வெட்டுக்கள் இலங்கையின் வாழ்க்கை மரபுகள் மற்றும் அறிவு முறைமைகளின் செழுமையை பிரதிபலிக்கின்றன.

இலங்கையின் புலனாகாத கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபை​ என்பவற்றின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் வலுப்படுத்தப்படுகின்றது. இவற்றின் பங்களிப்புக்கள் எதிர்கால சந்ததியினருக்கான வாழ்க்கை மரபுரிமையைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.