சிங்கராஜ உயிர்க்கோளக் காப்பகம்
இலங்கையின் ஈர வலயத்தில் தொடர்ந்து காணப்படும் மிகப்பெரிய தாழ்நில பசுமையான மழைக்காடு சிங்கராஜா ஆகும். மேலும், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் அதன் அசாதாரணமான உயர்மட்ட உள்ளூர் தன்மை காரணமாக சிறந்த சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது. 29,590 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இது அண்ணளவாக 6.38636 ͦ அகலாங்கிலும் 80.4918 ͦ நெட்டாங்கிலும் அமைந்துள்ளது. 2,500 ஹெக்டேர் IUCN-IBP கடுமையான இயற்கை காப்பகமாக பெயரிடப்பட்டபோது, இது முதலில் 1971 ஆம் ஆண்டில் கடுமையான பாதுகாப்பை வழங்கியது. 1977 ஆம் ஆண்டு அனைத்து வகையான மர வெட்டியெடுப்பும் தடைசெய்யப்பட்டது, மேலும் 1978 ஆம் ஆண்டு சிங்கராஜா வனப்பகுதி, யுனெஸ்கோவின் மனிதனும் உயிர்க்கோளமும் (MAB) என்ற உயிர்க்கோளக் காப்பகமாக முறையாக அங்கீகரிக்கப்பட்டது. சிங்கராஜா காப்பகத்தின் தெற்குப் பகுதியில் 84 குடும்பங்கள் மட்டுமே வசி்க்கும் அதே வேளையில், அண்ணளவாக 544 குடும்பங்கள் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கின்றன மற்றும் இக்குடும்பங்கள் இறப்பர், தேயிலை, இலவங்கப்பட்டை, நெல் மற்றும் காய்கறிச் செய்கை போன்ற வாழ்வாதாரங்களைச் சார்ந்துள்ளன, நடுகை மேம்படுத்தல், நிலைபேறான வன இனங்களின் பயன்பாடு மற்றும் உள்ளூர் இளைஞர்கள் பார்வையாளர்களை வழிநடத்துதல் – பாதுகாப்பு மற்றும் கிராமப்புற அபிவிருத்திக்கு ஆதரவளித்தல் உட்பட சமூக அடிப்படையிலான முன்னெடுப்புகளை மேற்கொள்ளல் ஏனெனில், காடு ஆண்டுதோறும் அண்ணளவாக 20,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது.