SLNCU

உலக மரபுரிமை

“மரபுரிமை என்பது நமது கடந்த கால மரபுரிமைப் பேறு, இன்று நாம் வாழ்வது மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கடத்துவது ஆகும்.” அடையாளம், உத்வேகம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான முக்கிய மூலங்களாகவுள்ள  கலாசாரரீதியான மற்றும் இயற்கைரீதியான மரபுரிமை ஆகிய இரண்டையும் இது உள்ளடக்கியுள்ளது. சில மரபுரிமைத் தளங்கள் தேசிய எல்லைகளை மீறும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. உலக மரபுரிமையின் கருத்து, அனைத்து மனிதகுலத்திற்கும், அவர்களின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், மிகச் சிறந்த உலகளாவிய மதிப்புள்ள தளங்களை அங்கீகரிப்பதற்காக தாபிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில், இது போன்ற மரபுரிமைகளை அடையாளம் காண்பதில், பாதுகாப்பதில் மற்றும் பேணிப் பாதுகாப்பதில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு உலக கலாசார மற்றும் இயற்கை மரபுரிமையைப் பாதுகாப்பது தொடர்பான மாநாட்டை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது,

 

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட எட்டு உலக பாரம்பரிய தளங்களுடன், இந்த உலகளாவிய கட்டமைப்பிற்குள் இலங்கை ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இவற்றில் பண்டைய நகரங்களான அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் சீகிரியா புனித நகரம் கண்டி, வரலாற்று சிறப்புமிக்க பழைய நகரமான காலி மற்றும் அதன் கோட்டைகள்; தம்புள்ளையில் உள்ள பொற்கோயில், இலங்கையின் மத்திய மலைநாட்டுப்பகுதிகள் மற்றும் சிங்ஹராஜ வனக்காப்பகம் ஆகியவை அடங்கும். இத்தளங்கள் அனைத்தும் தீவின் விதிவிலக்கான கலாசார சாதனைகள், ஆன்மீக மரபுகள் மற்றும் வளமான உயிர்ப்பல்வகைமை என்பவற்றைப் பிரதிபலிக்கின்றன.

உலக மரபுரிமைகள் மாநாட்டின் ஊடாக, மரபுரிமைகளைப் பாதுகாக்கவும், கல்வெட்டுகளுக்கான தளங்களுக்கு பெயர்குறிக்கவும், பயனுறுதிவாய்ந்த முகாமைத்துவ மற்றும் கண்காணிப்பு முறைமைகளை நிறுவவும், உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்தவும், பொது விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் அரச தரப்பினர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். உலக மரபுரிமைகளின் நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்வதில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தொழில்சார் ஆற்றல் மேம்பாடு என்பன மையமாக உள்ளன.

இலங்கையின் உலக மரபுரிமைகள் தளங்களின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் எதிர்கால சந்ததியினருக்காக நாட்டின் கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கின்ற மத்திய கலாசார நிதியம்(CCF), வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் அர்ப்பணிப்புமிக்க பங்களிப்புகளால் பலப்படுத்தப்படுகின்றன.